விஷம் குடித்து மூதாட்டி சாவு
பாளையங்கோட்டையில் விஷம் குடித்து மூதாட்டி இறந்தார்.
நெல்லை, மே:
பாளையங்கோட்டையை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவருடைய மனைவி ரெங்கம்மாள் (வயது 61). இவர் நேற்று வெளியில் செல்லும்போது முக கவசம் அணியாமல் சென்றதாகவும், இதனை அவருடைய மகன் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த ரெங்கம்மாள் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரெங்கம்மாள் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story