நகராட்சி அலுவலகத்தில் காய்கறி வியாபாரிகள் முற்றுகை


நகராட்சி அலுவலகத்தில் காய்கறி வியாபாரிகள் முற்றுகை
x
தினத்தந்தி 24 May 2021 7:19 PM GMT (Updated: 24 May 2021 7:19 PM GMT)

விருதுநகர் நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

விருதுநகர், 
விருதுநகரில் உள்ள 36 வார்டுகளிலும் தள்ளுவண்டிகளில் காய்கறி விற்பனை செய்ய அனுமதி வழங்க கோரி காய்கறி வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனைதொடர்ந்து ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ., தாசில்தார் சிவஜோதி, கமிஷனர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி ஆகியோர் காய்கறி வியாபாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 12 தள்ளு வண்டிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் நகராட்சி நிர்வாகம் நிர்ணயிக்கும் விலையில் காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.

Next Story