மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை


மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 29 May 2021 9:47 PM GMT (Updated: 29 May 2021 9:47 PM GMT)

மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் வடக்கு தெருவை சேர்ந்த பெரியதம்பியின் மனைவி சீனியம்மாள்(வயது 75). இவர் முதுகுத்தண்டு வலி காரணமாக தொடர்ந்து அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை அவர் வீட்டுத்தோட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது மகன் பன்னீர்செல்வம் தா.பழூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து சீனியம்மாளின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story