நெல்லை மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் கொரோனாவுக்கு பலி


நெல்லை மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 7 Jun 2021 8:05 PM GMT (Updated: 7 Jun 2021 8:05 PM GMT)

நெல்லை மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் கொரோனாவுக்கு பலியானார்.

நெல்லை, ஜூன்:
நெல்லை குறிச்சியை சேர்ந்தவர் இசக்கி (வயது 58). இவர் நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில் சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்ற இசக்கியின் உடல்நிலை மோசம் அடைந்தது. உடனடியாக அவர், மேல் சிகிச்சைக்காக  பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலையில் இசக்கி பரிதாபமாக இறந்தார்.

Next Story