ஆற்காட்டில் வங்கி, சூப்பர் மார்க்கெட்டுக்கு அபராதம்


ஆற்காட்டில் வங்கி, சூப்பர் மார்க்கெட்டுக்கு அபராதம்
x
தினத்தந்தி 10 Jun 2021 5:26 PM GMT (Updated: 10 Jun 2021 5:26 PM GMT)

ஆற்காட்டில் வங்கி, சூப்பர் மார்க்கெட்டுக்கு அபராதம்

ஆற்காடு

கொரோனா பரவலால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆற்காடு பகுதியில் ஊரடங்கு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என நேற்று தாசில்தார் காமாட்சி தலைமையில் வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது ஆற்காட்டில் உள்ள ஒரு அரசு வங்கி மற்றும் தனியார் சூப்பர் மார்க்கெட் ஆகியவை ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல் மீறி செயல்பட்டதாக தெரிய வந்தது. இதையடுத்து தாசில்தார் காமாட்சி இரு நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து, எச்சரிக்கை விடுத்தார்.

Next Story