மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jun 2021 6:00 PM GMT (Updated: 11 Jun 2021 6:00 PM GMT)

திருப்புவனத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்புவனம்,

திருப்புவனம் கீழ ரத வீதியை சேர்ந்தவர் சரவணன்(வயது 42). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். பின்னர் நேற்று காலை பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் இது தொடர்பாக திருப்புவனம் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன், இந்திரா நகரை சேர்ந்த முகமத் தவுபீக்(19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டன.

Next Story