மணல் கடத்தல்; 2 பேர் கைது


மணல் கடத்தல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 Jun 2021 3:42 AM GMT (Updated: 14 Jun 2021 3:42 AM GMT)

போலீசார் நேற்று முன்தினம் அதிகத்தூர் கொசஸ்தலை ஆற்றின் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அதிகத்தூர் கொசஸ்தலை ஆற்றின் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்த 3 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் குப்பம் கண்டிகை பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 28), ராமன் கோவிலை சேர்ந்த கோகுல் (வயது 20) என தெரியவந்தது. போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Next Story