பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வத்திராயிருப்பு,ஜூன்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வத்திராயிருப்பு தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும், சாட்டை துரைமுருகன், மகிழன் மற்றும் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் சரவணன், நகரச் செயலாளர் முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். மேற்கு மாவட்ட செயலாளர் பாலன், வழக்கறிஞர் பிரிவு வீரமணி, பிரபாகரமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story