புளியங்குடியில் பள்ளிக்கூட ஆசிரியர் தற்கொலை


புளியங்குடியில் பள்ளிக்கூட ஆசிரியர் தற்கொலை
x
தினத்தந்தி 21 Jun 2021 7:37 PM GMT (Updated: 21 Jun 2021 7:37 PM GMT)

புளியங்குடியில் பள்ளிக்கூட ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புளியங்குடி:
புளியங்குடி டி.என்.புதுக்குடியை சேர்ந்தவர் பீட்டர் (வயது 54). இவர் அங்குள்ள தனியார் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். சில நாட்களாக பல் வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் தனது உடல்நிலை குறித்த மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் பீட்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பீட்டர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஆசிரியர் பீட்டருக்கு ஜெஸ்லின் என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

Next Story