மூதாட்டியின் உயிரை பறித்த கொரோனா


மூதாட்டியின் உயிரை பறித்த கொரோனா
x
தினத்தந்தி 15 July 2021 4:56 PM GMT (Updated: 15 July 2021 4:56 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி ஒருவர் பலியாகினார்.

திண்டுக்கல்: 


திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே 613 பேர் இறந்துள்ளனர். மேலும் கடந்த சில நாட்களாக உயிரிழப்பு இல்லை. இந்த நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற வேடசந்தூர் தாலுகாவை சேர்ந்த 72 வயது மூதாட்டி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். 

இதன் மூலம் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 614 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே நேற்று 5 பெண்கள் உள்பட மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 31 ஆயிரத்து 913 ஆனது. 

அதேநேரம் 21 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 230 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story