கொரோனாவுக்கு பெண் சாவு


கொரோனாவுக்கு பெண் சாவு
x
தினத்தந்தி 17 July 2021 5:18 PM GMT (Updated: 17 July 2021 5:18 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் இறந்தார். 41 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம், ஜூலை.18-

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 43,328 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 335 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 42,424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 569 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 53 வயதுடைய பெண், சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரோடு சேர்த்து மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 336 ஆக உயர்ந்துள்ளது.

41 பேருக்கு தொற்று

மேலும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று வெளிவந்தது. இதில் புதிதாக 41 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43,369 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 42,478 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 555 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story