டீக்கடை பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு


டீக்கடை பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 20 July 2021 6:17 PM GMT (Updated: 20 July 2021 6:17 PM GMT)

சிங்கம்புணரி அருகே டீக்கடை பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்து சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட மல்லாகோட்டையை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வசந்தா (வயது 50). இந்த நிலையில் நேற்று காலை டீக்கடையில் வசந்தா இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் வசந்தாவிடம் டீ வாங்கி குடித்தனர். பின்னர் அவரிடம் பேச்சு கொடுத்தவாறே மர்ம ஆசாமி ஒருவன் வசந்தா அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி விட்டான். இது குறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீசில் வசந்தா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து நகையை பறித்த 3 பேரை தேடி வருகின்றனர்.


Next Story