வாலிபரை தாக்கிய 3 ேபர் கைது


வாலிபரை தாக்கிய 3 ேபர் கைது
x
தினத்தந்தி 28 July 2021 7:12 PM GMT (Updated: 28 July 2021 7:12 PM GMT)

ராஜபாளையத்தில் வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராஜபாளையம். 
ராஜபாளையம் பச்சை காலனியை சேர்ந்தவர் பாண்டிராஜ் (வயது27). இவர் முடி வெட்டும் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்குள் பித்தளை தகடு, விபூதி, குங்குமம் உள்ளிட்ட பொருட்கள் கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர், அவருடைய சித்தப்பா கருணாநிதியிடம் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் வாக்குவாதம் முற்றி கருணாநிதி மகன் சின்னச்சாமி (30) உள்பட 3 பேர் சேர்ந்து கம்பினால் பாண்டிராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னச்சாமி உள்பட 3 பேரையும் கைது ெசய்தனர்.

Next Story