நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47,315 ஆக அதிகரிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47,315 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 2 Aug 2021 5:16 PM GMT (Updated: 2 Aug 2021 5:17 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 54 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருப்பதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,315 ஆக அதிகரித்து உள்ளது.

நாமக்கல்:

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 47 ஆயிரத்து 264 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரின் பெயர்கள் அந்தந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 47 ஆயிரத்து 261 ஆக குறைந்தது.
இந்த நிலையில் புதிதாக மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,315 ஆக அதிகரித்து உள்ளது.
581 பேருக்கு சிகிச்சை
இதற்கிடையே நேற்று மாவட்டத்தில் 65 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை இந்த மாவட்டத்தில் 46 ஆயிரத்து 283 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 451 பேர் பலியான நிலையில், மீதமுள்ள 581 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்து இருப்பதால், பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story