அணைக்கட்டு தாலுகாவில் 1,358 பேருக்கு புதிய குடும்ப அட்டை
1,358 பேருக்கு புதிய குடும்ப அட்டை
அணைக்கட்டு
அணைக்கட்டு தாலுகாவில் உள்ள பொதுமக்கள் புதிய குடும்ப அட்டை கேட்டு கடந்த மார்ச் மாதம் முதல் கடந்த மாதம் 10-ந் தேதிவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுடைய மனுக்களை பரிசீலனை செய்து புதிய குடும்ப அட்டைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. அணைக்கட்டு தாலுகாவில் 1,358 புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கான உத்தரவுகள் பெறப்பட்டு, கடந்த இரண்டு நாட்களாக புதிய குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குடும்ப அட்டைகேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அவர்களுடைய செல்போன் எண்ணுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அணைக்கட்டு வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு வந்து அவர்களது ஆதார் அட்டையை காண்பித்து புதிய குடும்ப அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என வட்ட வழங்கல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story