மின்னல் தாக்கி பெண் பலி


மின்னல் தாக்கி பெண் பலி
x
தினத்தந்தி 21 Sep 2021 7:54 PM GMT (Updated: 21 Sep 2021 7:54 PM GMT)

அருப்புக்கோட்டை அருகே மின்னல் தாக்கியதில் பெண் பலியானார்.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்த கருப்பசாமி மனைவி ஆவுடையம்மாள் (வயது 52). இவர் அதே பகுதியில் உள்ள   காட்டில் களை எடுக்கும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் ஆவுடையம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் ஆவுடையம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மாசார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story