கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்


கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 21 Oct 2021 3:54 PM GMT (Updated: 21 Oct 2021 3:54 PM GMT)

கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பஸ் டிரைவர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி: 

பெரியகுளம் தென்கரையை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் மணி என்ற மணிவண்ணன் (வயது 23). தனியார் பஸ் டிரைவர். இவருக்கு, கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் மணி, அந்த மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து அந்த மாணவி, தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story