தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 29 Nov 2021 10:15 PM GMT (Updated: 29 Nov 2021 10:15 PM GMT)

தொழிலாளி தற்கொலை

பணகுடி:
பணகுடியை அடுத்த காவல்கிணறு அம்பேத்கர் நகரை சேர்ந்த சுப்பையா மகன் ராஜேந்திரன் (வயது 56). கூலி தொழிலாளி. இவருக்கு மாடத்தி என்ற மனைவியும், 4 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். ராஜேந்திரனுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ராஜேந்திரன் வீட்டில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story