வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை- ரூ.60 ஆயிரம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன்  நகை- ரூ.60 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 30 Nov 2021 6:57 PM GMT (Updated: 30 Nov 2021 6:57 PM GMT)

வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை- ரூ.60 ஆயிரம் திருட்டு

மணிகண்டம், டிச.1-
மணிகண்டம் அருகே உள்ள கண்தீனதயாள் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 29). இவரது மனைவி பார்வதி (28). தம்பிகள் சரக்கு ஆட்டோவில் ஊர்,ஊராக சென்று காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் கோவிந்தராஜ் வீட்டை பூட்டிவிட்டு மனைவி, குழந்தைகளுடன் காய்கறி வியாபாரத்துக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் இரவு 10 மணி அளவில் வீட்டுக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இறந்த 3 பவுன் தங்க நகை, ரூ.60 ஆயிரம் திருடு போயிருந்தது. மேலும் அங்கு அறையில் வைத்திருந்த ஒரு பித்தளை அண்டா, ஒரு பித்தளை சர்வம், 2 குத்து விளக்குகள் ஆகியவையும் திருடு போயிருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு இந்த துணிகர திருட்டு நடைபெற்றுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Next Story