போலீஸ் வேலைக்கு தேர்வாகாத ஏமாற்றத்தில் பட்டதாரி இளம்பெண் தற்கொலை
விருதுநகரில் போலீஸ் வேலைக்கு தேர்வாகாத ஏமாற்றத்தில் பட்டதாரி இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்,
விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மகள் பூஜா (வயது 21). கணினி அறிவியல் பட்டதாரியான இவர் போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற இவருக்கு வேலை கிடைப்பதற்கான தகுதி மதிப்பெண்களில் ஒரு மதிப்பெண் குறைவாக கிடைத்ததால் வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த பூஜா விபரீத முடிவு எடுத்து, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி பூஜாவின் தாயார் ஷீலா (45) கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story