மதிப்பெண் சான்றிதழில் தந்தையின் `இனிசியல்' மாறியதால் கையில் பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு


மதிப்பெண் சான்றிதழில் தந்தையின் `இனிசியல் மாறியதால்  கையில் பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 27 Jan 2022 12:06 AM IST (Updated: 27 Jan 2022 12:06 AM IST)
t-max-icont-min-icon

கையில் பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஆலங்குடி:
ஆலங்குடி அருகே செம்பட்டி விடுதி கீழப்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் அருண் முருகன் (வயது 20). இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவருக்கு வழங்கிய மதிப்பெண் சான்றிதழில் தனது பெயருக்கு முன்னால் தந்தையின் `இனிசியல்' தவறாக மாறியுள்ளது. இதுகுறித்து அவர் கல்லூரியில் சென்று கேட்டபோது மேல்நிலைக்கல்வி இயக்குனரக அலுவலகத்தில் கேட்க சொல்லியுள்ளனர். அங்கும் இனிசியல் மாற்ற முடியவில்லை. இதனால் விரக்தியடைந்த அருண் முருகன் எலி மருந்தை (விஷம்) தின்றும், கை நரம்பை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அருண்முருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செம்பட்டி விடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story