வேதாரண்யம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்


வேதாரண்யம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 27 Jan 2022 5:12 PM GMT (Updated: 27 Jan 2022 5:12 PM GMT)

வேதாரண்யம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

வேதாரண்யம்:
இருக்காது என வேதாரண்யம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேதாரண்யம் தாலுகா வாய்மேடு, ஆயக்காரன்புலம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இந்த துணைமின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான வாய்மேடு, ஆலங்காடு, கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story