வாலிபர் தற்கொலை
கடையநல்லூரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் குமந்தாபுரம் நகராட்சி 1-வது வார்டு காளியம்மன் கோவில் தெற்கு தெருவைச் சேர்ந்த பன்னீர் மகன் விஜயகுமார் (வயது 24). நேற்று முன்தினம் வெளியே சென்ற அவர் இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. பின்னர் அக்கம்பக்கத்தில் அவரை தேடியபோது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே உள்ள புங்கை மரத்தில் விஜயகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வாலிபர் தற்கொலை
Related Tags :
Next Story