சீட்டுப்பணத்தை கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதால் விஷம் குடித்து பெண் தற்கொலை


சீட்டுப்பணத்தை கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதால் விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 25 April 2022 2:36 PM GMT (Updated: 25 April 2022 2:36 PM GMT)

சீட்டுப்பணத்தை கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி. நகர் பகுதியில் வசித்து வருபவர் வேலு. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சரண்யா (வயது 32). அப்பள கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சரண்யா அதே பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிகுழு நடத்தும் சாந்தி என்பவரிடம் ரூ.1 லட்சம் சீட்டு போட்டு இருந்தார். சரண்யா, சீட்டு பணத்தை எடுத்துவிட்டு சில மாதங்களாக பணத்தை சரிவர கட்டமுடியாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்யா வீட்டுக்கு சென்ற சாந்தி, சீட்டு பணத்தை கட்டும்படி கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சரண்யா நேற்று முன்தினம் எறும்பு பவுடரை(விஷம்) கலக்கிக் குடித்துவிட்டார். 

இதில் மயங்கி விழுந்த அவரை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சரண்யா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தியை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story