ஹவாலா பணமாக ரூ.2 லட்சம் லஞ்சம் கொடுத்த வழக்கில் ஆடிட்டர் கைது


ஹவாலா பணமாக ரூ.2 லட்சம் லஞ்சம் கொடுத்த வழக்கில் ஆடிட்டர் கைது
x
ஹவாலா பணமாக ரூ.2 லட்சம் லஞ்சம் கொடுத்த வழக்கில் ஆடிட்டர் கைது
தினத்தந்தி 11 May 2022 4:43 PM GMT (Updated: 11 May 2022 4:43 PM GMT)

ஹவாலா பணமாக ரூ.2 லட்சம் லஞ்சம் கொடுத்த வழக்கில் ஆடிட்டர் கைது

கோவை,

வெளிநாடுகளில் இருந்து கொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றுக்கு நன்கொடை வசூலிப்பதில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்று இருப்பது சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தியது. டெல்லி, மும்பை, ராஜஸ்தான், மைசூர், சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ.அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். ஒரு சில இடங்களில் நேற்று 2-வது நாளாகவும் இந்த சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில்ஈரோடு மாவட்டம் சேனாதிபாளையம் பகுதியை சேர்ந்த வாகேஷ் (வயது 31) என்ற ஆடிட்டரை அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். கோவையில் உள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் வாகேஷ் ஆடிட்டராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது அந்த மருத்துவமனையின் வெளிநாட்டு பண பரிமாற்றத்துக்கான அனுமதியை நீட்டித்து கொடுப்பதற்காக, டெல்லியை சேர்ந்த உள்துறை அமைச்சக முன்னாள் அதிகாரி பிரமோத்குமார் என்பவரிடம்  ஹவாலா பணமாக ரூ.2 லட்சத்தை லஞ்சமாக  வாகேஷ் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த வழக்கில் வாகேசை கைது செய்ததாக சி.பி.ஐ. தெரிவித்து உள்ளது. மேலும் தனியார் மருத்துவமனை நிர்வாகி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த நிலையில் கைதான வாகேஷ், நேற்று மாலை கோவை சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் மேலும் விசாரணை நடத்தஇருப்பதால், டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்த அனுமதி அளிக்குமாறு, கோவை சி.பி.ஐ.  கோர்ட்டில் அதிகாரிகள் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்த ராஜன், வருகிற 13-ந் தேதி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு உத்திரவிட்டார். இதைத்தொடர்ந்து சி.பி.ஐ.அதிகாரிகள் வாகேசை டெல்லி கொண்டு சென்றனர்.
அன்னிய செலாவணி மோசடியில் நாடு முழுவதும் 6 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதுடன் 2 கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் ஆடிட்டர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story