வாலிபர் தீக்குளித்து தற்கொலை


வாலிபர் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 11 May 2022 7:51 PM GMT (Updated: 11 May 2022 7:51 PM GMT)

வாலிபர் தீக்குளித்து தற்கொலை

முசிறி, ேம.12-
முசிறியை அடுத்த அந்தரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 32). இவரது மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு சபிதா (9) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரியா இறந்து விட்டார். இதனால்வேல்முருகன் குடி பழக்கத்துக்கு அடிமையானார். இந்த நிலையில் வேல்முருகன் தனது தாய் சுப்புலட்சுமியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த வேல்முருகன் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீக்காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முசிறிஅரசுமருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story