பொக்லைன் எந்திரம் மோதி சிறுமி பலி


பொக்லைன் எந்திரம் மோதி சிறுமி பலி
x
தினத்தந்தி 17 May 2022 6:04 PM GMT (Updated: 17 May 2022 6:04 PM GMT)

கமுதியில் பொக்லைன் எந்திரம் மோதி சிறுமி பலியானாள்.

கமுதி, 

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பவுண்டு தெருவை சேர்ந்தவர் வெங்கட்சுப்பிரமணியன். இவருடைய மகள் சாய்தர்ஷினி (வயது 13). இந்த நிலையில் நேற்று சிறுமி சாய்தர்ஷினி பால் வாங்குவதற்காக சைக்கிளில் வீட்டை விட்டு வெளியே சென்றாள். பண்ணையில் பால் வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தாள்.
வடக்கு முதுகுளத்தூர் ரோட்டில் வந்த போது அங்கு ஒரு பழைய வீட்டை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சைக்கிளில் வந்த சிறுமி மீது பொக்ைலன் எந்திரம் மோதியது. இதில் சிறுமி படுகாயம் அடைந்தாள். விபத்தை பார்த்ததும்  விருதுநகர் மாவட்டம், மாணிக்கபுரத்தை சேர்ந்த பொக்லைன் டிரைவர் கார்த்திக்ராஜா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். 
உடனே அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த சிறுமியை மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சிறுமி பரிதாபமாக இறந்தாள். இது குறித்து தகவல் அறிந்ததும் கமுதி துணை சூப்பிரண்டு மணிகண்டன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. தப்பி ஓடிய பொக்லைன் டிரைவரை போலீசார் தேடிவருகிறார்கள்.


Next Story