டெல்லியில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல் அமைச்சர் கெஜ்ரிவால் கன்னத்தில் அறைந்த மர்ம நபர்
டெல்லியில் தேர்தல் பிரசாரத்தில் முதல் அமைச்சர் கெஜ்ரிவால் கன்னத்தில் மர்ம நபர் அறைந்தது பரபரப்பினை ஏற்படுத்தியது. #ArvindKejriwal
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை நான்கு கட்ட தேர்தல் நடந்து முடிந்து உள்ளது. தொடர்ந்து வருகிற 6ந்தேதி 5வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் டெல்லியில் மோதி நகர் பகுதியில் முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திறந்த வாகனம் ஒன்றில் ஆதரவாளர்களுடன் நின்றபடி பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடையே தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவர் சென்ற வாகனம் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென ஏறி கெஜ்ரிவாலின் கன்னத்தில் அறைந்து விட்டார். இதனால் அவர் அதிர்ச்சியில் உறைந்து விட்டார். அவரை கெஜ்ரிவால் ஆதரவாளர்கள் பிடிப்பதற்குள் உடனே கீழே இறங்கி தப்பினார்.
Related Tags :
Next Story