வங்கியில் ரூ.1.60 கோடி கையாடல்; காசாளர் சிக்கினார்


வங்கியில் ரூ.1.60 கோடி கையாடல்;   காசாளர் சிக்கினார்
x

வங்கியில் ரூ.1.60 கோடி கையாடல் செய்த காசாளர் சிக்கினார்

பாகல்கோட்டை: பாகல்கோட்டை டவுன் பகுதியில் ஒரு வங்கி உள்ளது. இந்த வங்கியில் காசாளராக பணியாற்றி வருபவர் சந்தோஷ். இதற்கிடையில், கடந்த 4-ந் தேதி அந்த வங்கியில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் பணபரிமாற்றம் செய்யப்பட்டு இருந்தது பற்றி உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து, வங்கி அதிகாரிகள் பரிசீலனை நடத்தினார்கள். அப்போது வங்கியின் காசாளரான சந்தோஷ் கணக்கில் இருந்து, அவரது மனைவி மற்றும் தாய்க்கு ரூ.1 கோடியே 60 லட்சம் பரிமாற்றம் செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


மேலும் அது ஆர்.பி.ஐ.க்கு சேர வேண்டிய பணத்தை சந்தோஷ் சட்டவிரோதமாக தனது மனைவி, தாயின் கணக்குக்கு மாற்றி கையாடல் செய்திருப்பதை வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்திருந்தனர். இதுபற்றிய புகாரின்பேரில் பாகல்கோட்டை சைபர் கிரைம் போலீசார் காசாளர் சந்தோைச கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1.60 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story