எனது பதவி காலத்தில் ஒவ்வொரு நாளும் நாட்டிற்காகவே பணியாற்றியுள்ளேன்: பிரணாப் முகர்ஜி
எனது பதவி காலத்தில் ஒவ்வொரு நாளும் நாட்டிற்காகவே பணியாற்றியுள்ளேன் என தனது உரையில் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
குடியரசு தலைவர் பதவி காலம் இன்றுடன் நிறைவு பெறுவதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரணாப் முகர்ஜி உரையாற்றியுள்ளார்.
அவற்றில், ஜனாதிபதியாக கடந்த 5 வருடஙகளுக்கு முன் பதவியேற்கும்பொழுது, நமது அரசியலமைப்பினை பாதுகாப்பேன் என உறுதியளித்தேன்.
இந்த 5 வருடங்களில் ஒவ்வொரு நாளும் எனது கடமையில் கவனமுடன் இருந்தேன்.
சகிப்பு தன்மை மற்றும் பன்முகதன்மையில் நமது இந்தியாவின் ஆத்மா உறைந்துள்ளது. பன்முக கலாசாரம், நம்பிக்கை மற்றும் மொழி ஆகியவை இந்தியாவை சிறப்படைய செய்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்று கொண்டேன்.
இந்திய மக்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்காக நான் ஆழ்ந்த நன்றி கடன்பட்டுள்ளேன் என அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story