தீபாவளி பரிசாக வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு உடனடி மருத்துவ விசா
தீபாவளி பரிசாக வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு உடனடி மருத்துவ விசா வழங்க சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் மருத்துவ சிகிச்சை வேண்டி வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பலர் விசா கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். அந்தவகையில் ஏராளமான மனுக்கள் இந்திய வெளியுறவு துறையில் கிடப்பில் உள்ளன.
இந்நிலையில், மருத்துவ விசா கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு தீபாவளி பரிசாக அதை உடனடியாக பரிசீலித்து அனுமதி வழங்க உத்தரவிட்டு இருப்பதாக வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் தகவல் வெளியிட்டு உள்ளார்.
இதையடுத்து தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினம் பாகிஸ்தானை சேர்ந்த 6 பேருக்கு உடனடியாக மருத்துவ விசா வழங்கப்பட்டது. இந்த மாதம் மட்டும் இதுவரை பாகிஸ்தானை சேர்ந்த 19 பேருக்கு மருத்துவ விசா வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story