காதலனுடன் செல்போனில் வீடியோ கால் பேசிக் கொண்டே தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி


காதலனுடன் செல்போனில் வீடியோ கால் பேசிக் கொண்டே தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி
x
தினத்தந்தி 21 Feb 2018 9:26 AM GMT (Updated: 21 Feb 2018 9:26 AM GMT)

இந்தியாவில் காதலனுடன் செல்போனில் வீடியோ கால் பேசிக் கொண்டே தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர  மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹனிஷா சவுத்ரி (24). இவர் தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ இரண்டாமாண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்த ஹனிஷா, தக்‌ஷித் படேல் என்ற இளைஞரை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தக்‌ஷிதுக்கு தனது செல்போனிலிருந்து ஹனிஷா வீடியோ கால் செய்துள்ளார். அப்போது திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்வது குறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் கோபமடைந்த ஹனிஷா தற்கொலை செய்யப் போவதாக தக்‌ஷித்திடம் கூறி அதை செய்ய தொடங்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தக்‌ஷித், உடனடியாக ஹனிஷா தங்கியுள்ள விடுதிக்கு வந்து அறை கதவை உடைத்தார். அங்கு மயங்கிய நிலையில் இருந்த ஹனிஷாவை தூக்கிக் கொண்டு தக்‌ஷித் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஹனிஷாவின் செல்போனை கைப்பற்றி விட்டு இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story