மோடியின் செல்வாக்கு சரியும்போது எல்லாம் இதுபோன்று கொலை சதியென செய்தி பரப்பப்படும் - காங்கிரஸ்


மோடியின் செல்வாக்கு சரியும்போது எல்லாம் இதுபோன்று கொலை சதியென செய்தி பரப்பப்படும் - காங்கிரஸ்
x
தினத்தந்தி 8 Jun 2018 11:12 AM GMT (Updated: 8 Jun 2018 11:12 AM GMT)

மோடியின் செல்வாக்கு சரியும் போது எல்லாம் இதுபோன்று கொலை சதியென செய்திகள் பரப்பப்படும் என காங்கிரஸ் தலைவர் பேசியுள்ளார். #PMModi #Congress



மும்பை,


பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதிதிட்டம் தீட்டுவதாக மும்பை போலீஸ் உளவுத்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபம் பேசுகையில், “ இது முற்றிலும் உண்மையற்றது என்று நான் கூறவரவில்லை. இருப்பினும், எப்போது எல்லாம் மோடியின் செல்வாக்கு சரிகிறதோ அப்போது எல்லாம் கொலைக்கு சதிதிட்டம் செய்திகள் பரப்பப்படும். இது பிரதமர் மோடியின் பழைய தந்திரம், முதல்-மந்திரியாக இருந்த போதே இதனை தொடர்கிறார். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணையை முன்னெடுக்க வேண்டும், எவ்வளவு உண்மை உள்ளது என்பதை தெரிய விசாரிக்க வேண்டும்,” என கூறியுள்ளார். 


Next Story