வீட்டில் இருப்பவர்களுடன் தாய்மொழியில் பேசுங்கள் -துணைஜனாதிபதி வெங்கையா நாயுடு
வீட்டில் இருப்பவர்களுடன் தாய்மொழியில் பேசுங்கள். மற்றவர்களுடன் வேறு மொழியில் பேசுங்கள் என துணைஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறி உள்ளார். #VenkaiahNaidu
புதுச்சேரி
புதுச்சேரியில் நடந்த பல்கலைக்கழக நிகழ்ச்சியில் துணைஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இயற்கையும், சுகாதாரமும்தான் வாழ்க்கையை சிறப்பானதாக்குகிறது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் சுத்தமாகவும், பசுமையாகவும் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
ஒவ்வொருவருக்கும் தாய்மொழி கண் போன்றது. மற்ற மொழிகள் கண்ணாடி போன்றவை. வீட்டில் இருப்பவர்களுடன் தாய்மொழியில் பேசுங்கள். மற்றவர்களுடன் வேறு மொழியில் பேசுங்கள்.என கூறினார்.
Related Tags :
Next Story