கேரளாவில் கனமழை, வெள்ளத்துக்கு இடுக்கி மாவட்டத்தில் 18 பேர் உயிரிழப்பு ஆட்சியர் ஜீவன்பாபு தகவல்


கேரளாவில் கனமழை, வெள்ளத்துக்கு இடுக்கி மாவட்டத்தில் 18 பேர் உயிரிழப்பு ஆட்சியர் ஜீவன்பாபு தகவல்
x
தினத்தந்தி 12 Aug 2018 9:22 AM GMT (Updated: 12 Aug 2018 9:22 AM GMT)

கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் கனமழை, வெள்ளத்துக்கு 18பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் ஜீவன்பாபு தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு, கோட்டயம், ஆலப்புழை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 

இந்தநிலையில் இடுக்கி மாவட்டத்தில் கனமழை, வெள்ளத்துக்கு 18 பேர் உயிரிழந்துள்ளனர். இடுக்கி அணையில் தண்ணீர் திறப்பை நிறுத்துவதுபற்றி இதுவரை முடிவு செய்யவில்லை. வானிலை மைய அறிவுறுத்தல்படி எதிர்வரும் மழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story