உத்தர பிரதேசத்தில் ஊறுகாய் ஆலையில் தவறி விழுந்து உரிமையாளர் உட்பட 3 பேர் பலி
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஊறுகாய் தயாரிப்பு ஆலையில் தவறி விழுந்து, அதன் உரிமையாளர், மகன் மற்றும் ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளனர்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஊறுகாய் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஊறுகாய் தொழிற்சாலையில் ரசாயனம் கலந்த காய்கறிகள் தொட்டி உள்ளது. ஊறுகாய் தயாரிப்பதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்தது.
அப்போது அதன் உரிமையாளர் மற்றும் அவரது மகனும் ரசாயனம் கலந்த தொட்டியை எட்டிபார்த்த போது நெடியால் பாதிக்கப்பட்டு தொட்டிக்குள் தவறி விழுந்தனர். அவர்களை காப்பாற்ற முயன்ற தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளியும் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து விரைந்த வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் இந்த் ஊறுகாய் ஆலை அனுமதி இன்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story