காங்கிரசுக்கு ஆதரவு அளித்து மாயாவதி மத்திய பிரதேசத்தின் கிங் மேக்கராவாரா ?


காங்கிரசுக்கு ஆதரவு அளித்து மாயாவதி மத்திய பிரதேசத்தின் கிங் மேக்கராவாரா ?
x
தினத்தந்தி 11 Dec 2018 9:35 AM GMT (Updated: 11 Dec 2018 10:25 AM GMT)

காங்கிரசுக்கு ஆதரவு அளித்து மாயாவதி மத்திய பிரதேசத்தின் கிங் மேக்கராவாரா ? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

போபால்

மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் சமநிலையில் நீடித்து வருவதால், அங்கு  இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது    இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. இதனால் ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

பாஜக ஆட்சி செய்து வந்த மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் 28ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவைப்படும் நிலையில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 108 இடங்களில் முன்னணி வகித்து வருகிறது. அதுபோல பாஜக 111 இடங்களில் முன்னணி வகித்து வருகிறது. இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலையில் இருந்து வருகின்றன.

இதன் காரணமாக மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது.மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை பெற தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் போட்டிப்போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வெற்றி பெறும் அனைத்து சுயேட்சைகளையும் இணைத்துகொள்ள தயாராக இருக்கிறோம் என்று முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் அறிவித்து உள்ளார்.

தற்போது வரை இழுபறி நீடித்து வரும் நிலையில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சைகளை பேச்சு வார்த்தைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

 சமாஜ்வாதி கட்சி அங்கு 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது.  பகுஜன் சமாஜ்  5 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதன் தலைவர் மாயாவதி   யாருக்கு ஆதரவு அளிப்பார் என தெரியவில்லை.பாரதீய ஜனதாவை அவர் ஆதரிப்பதற்கு சாத்தியமில்லை என கூறப்படுகிறது.

மேலும், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை பெற காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த கட்சிகளின் ஆதரவும் கிடைத்தால் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சிகளை விட அதிக வாக்குகள் நோட்டாவுக்குக் கிடைத்துள்ளன. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 2,33,272 (1.5%) வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story