மாநில அரசுகள் செயல்பாட்டின் அடிப்படையில் நடந்த தேர்தல் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கருத்து


மாநில அரசுகள் செயல்பாட்டின் அடிப்படையில் நடந்த தேர்தல் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கருத்து
x
தினத்தந்தி 11 Dec 2018 11:38 PM GMT (Updated: 11 Dec 2018 11:38 PM GMT)

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பா.ஜனதா மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங்கிடம் நிருபர்கள் நேற்று பாராளுமன்ற வளாகத்தில் கருத்து கேட்டனர்.

புதுடெல்லி, 

ராஜ்நாத் சிங் அதற்கு பதில் அளிக்கையில், ‘‘இந்த தேர்தல்கள் மாநில அரசுகளின் செயல்பாடு அடிப்படையில் நடைபெற்றது. இது மோடி அரசுக்கு எதிரான தீர்ப்பு அல்ல. காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணியும் தெலுங்கானாவில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளதே. தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.


Next Story