அனைத்து தலைமைத்துவ தேர்வுகளிலும் ராகுல்காந்தி பாஸ்! வீரப்பமொய்லி


அனைத்து தலைமைத்துவ தேர்வுகளிலும் ராகுல்காந்தி பாஸ்! வீரப்பமொய்லி
x
தினத்தந்தி 12 Dec 2018 2:34 PM GMT (Updated: 12 Dec 2018 2:34 PM GMT)

அனைத்து தலைமைத்துவ தேர்வுகளிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாஸ் ஆகிவிட்டார் என காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்பமொய்லி கூறியுள்ளார்.

ஐதராபாத்,  

சட்டசபை தேர்தல் நடந்த 5 மாநிலங்களில் சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. ராகுல்காந்தியை பப்பு என்று பா.ஜனதாவினர் கேலி செய்த நிலையில் பெரும் வெற்றியை தனதாக்கியுள்ளார். இதுதொடர்பாக  காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்பமொய்லி பேசுகையில், அனைத்து தலைமைத்துவ தேர்வுகளிலும் காங்கிரஸ் தலைவர்  ராகுல்காந்தி பாஸ் ஆகிவிட்டார் என கூறியுள்ளார்.  

 வீரப்பமொய்லி கூறுகையில், பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா கூட்டணி அரசின் தவறான நிர்வாகத்தை மக்கள் நீண்டகாலமாக பொறுத்து வந்தனர். ஆனால் சோனியா மற்றும் ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் பா.ஜனதாவினர் தாக்கி பேசியதை மக்களால் பொறுக்க முடியவில்லை. பிரதமர் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியையே இந்த வெற்றி காட்டுகிறது. இந்த வெற்றி காங்கிரசின் வெற்றி மட்டுமின்றி அதன் தலைமைக்கும் கிடைத்த வெற்றியாகும் . இதன் மூலம் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராகுல் காந்தி நாட்டின் தலைவராக அதாவது பிரதமராக உருவெடுப்பார் என கூறியுள்ளார். 

மேலும் ராகுல்காந்தி அனைத்து தலைமைத்துவ தகுதி தேர்வுகளிலும் வெற்றி பெற்று மிகப்பெரும் தலைவராக உருவெடுத்து இருப்பதாகவும்  வீரப்ப மொய்லி கூறியுள்ளார். 

Next Story