மக்களவை தேர்தலில் 300 இடங்களை பாஜக கைப்பற்றும் - அமித்ஷா
மக்களவை தேர்தலில் பாஜக 300 இடங்களை கைப்பற்றும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அகர்தாலா,
திரிபுரா மாநிலம் அகர்தாலாவில் நிர்வாகிகளை சந்தித்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரசிடம் இருந்து மீட்டுள்ளது பாஜக. இங்கு தற்போது பிரதமர் மோடியின் அலை வீசுகிறது.
வர இருக்கும் மக்களவை தேர்தலில் வடகிழக்கு மாநிலங்களில் 21-க்கும் அதிகமான எம்.பிக்களையும், மேற்கு வங்க மாநிலத்தில் 23-க்கும் அதிகமான எம்.பிக்களையும் பெற்று பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story