அசாம் மாநிலத்தில் 3 மந்திரிகள் ராஜினாமா
அசாம் மாநிலத்தில் 3 மந்திரிகள் ராஜினாமா செய்தனர்.
கவுகாத்தி,
அசாமில் முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் தலைமையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் கணபரிஷத் கட்சி பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகியது.
இதைத்தொடர்ந்து நேற்று அம்மாநில அரசில் மந்திரிகளாக இருந்த அசாம் கணபரிஷத் கட்சியை சேர்ந்த அதுல் போரா, கேசவ் மஹந்தா, பானிபூஷன் சவுத்ரி ஆகியோர் தங்கள் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்கள். முதல்-மந்திரியிடம் தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர்.
அசாமில் முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் தலைமையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் கணபரிஷத் கட்சி பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகியது.
இதைத்தொடர்ந்து நேற்று அம்மாநில அரசில் மந்திரிகளாக இருந்த அசாம் கணபரிஷத் கட்சியை சேர்ந்த அதுல் போரா, கேசவ் மஹந்தா, பானிபூஷன் சவுத்ரி ஆகியோர் தங்கள் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்கள். முதல்-மந்திரியிடம் தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர்.
Related Tags :
Next Story