எங்களின் இன்றைய அறிவிப்பு மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தூக்கத்தை கலைக்கும்- மாயாவதி


எங்களின் இன்றைய அறிவிப்பு  மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தூக்கத்தை கலைக்கும்-  மாயாவதி
x
தினத்தந்தி 12 Jan 2019 6:54 AM GMT (Updated: 12 Jan 2019 6:54 AM GMT)

எங்களின் இன்றைய அறிவிப்பு மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தூக்கத்தை கலைக்கும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறினார்.

லக்னோ

வரும் பாராளுமன்ற தேர்தலில்  உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ்  கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. 
இது தொடர்பாக பகுஜன் சமாஜ்  கட்சி தலைவர் மாயாவதியும், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும்  லக்னோவில் கூட்டாக இன்று பேட்டி அளித்தனர்.

பகுஜன் சமாஜ்  கட்சி தலைவர் மாயாவதி கூறியதாவது:
 
* எங்களின் இன்றைய அறிவிப்பு  மோடிக்கும் , அமித்ஷாவுக்கும் தூக்கத்தை கலைக்கப்போகிறது. ஏற்கனவே பகுஜன் சமாஜ்  கட்சியும், சமாஜ்வாதி கட்சியும்  கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு உள்ளன.

 * நாட்டின் நலனுக்காக இருவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறோம். மக்களின் மனம் அறிந்து செயல்பட்டால் கூட்டணியை தாண்டி தேர்தலில் வெற்றி பெறுவோம் என கூறினார்.

Next Story