இந்திய விளையாட்டு ஆணைய வளாகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை


இந்திய விளையாட்டு ஆணைய வளாகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 17 Jan 2019 2:28 PM GMT (Updated: 17 Jan 2019 2:28 PM GMT)

இந்திய விளையாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வளாகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

புதுடெல்லி,

இந்திய விளையாட்டு ஆணையத்தில் உள்ள அதிகாரிகள் சிலர் இரண்டு மாதங்களுக்கு முன்னதாக லஞ்சம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக விசாரணையை மேற்கொள்ள சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து சிபிஐ இந்திய விளையாட்டு ஆணையத்தின் வளாகத்தில் சோதனையை மேற்கொண்டுள்ளது. சிலரிடம் விசாரணையையும் மேற்கொண்டு வருகிறது என சிபிஐ வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story