இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும் என நிதி அமைச்சகம் விளக்கம்


இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும் என நிதி அமைச்சகம் விளக்கம்
x
தினத்தந்தி 30 Jan 2019 9:26 AM GMT (Updated: 30 Jan 2019 10:38 AM GMT)

இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும் என நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

2019 தேர்தல் நடைபெற சில மாதங்கள் இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் 2019-20ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1-ல் தாக்கல் செய்யப்பட உள்ளது. பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக ஓரணியில் திரளும் நிலையில் இந்த பட்ஜெட் மிகவும் முக்கியமான பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் விமர்சனங்களுக்குள் சிக்கியிருக்கும் பா.ஜனதா அரசுக்கும் மிகவும் முக்கியமான பட்ஜெட் ஆகும். வருவான வரி வரம்பில் மாற்றம், விவசாயிகளுக்கான சலுகை உள்ளிட்ட காரணிகள் இதில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. 
 
மத்திய பட்ஜெட் தாக்குதலில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மாற்றங்களை கொண்டுவந்து உள்ளது. பா.ஜனதா அரசு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதை பிப்ரவரி 28-ம் தேதியிலிருந்து பிப்ரவரி 1-ம் தேதியாக மாற்றியது. இதுபோல ரெயில்வே பட்ஜெட்டையும், பொது பட்ஜெட்டுடன் இணைத்தது. திட்ட ஆணையத்தை (Planning Commission) கலைத்துவிட்டு நிதி ஆயோக் ஏற்படுத்தியது. தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.  

இடைக்கால பட்ஜெட் என்பது தேர்தல் நடைபெற உள்ள ஆண்டில் முழு ஆண்டுக்குமாக இல்லாமல்,  இடைப்பட்ட சில மாதங்களுக்கான வரவு செலவு குறித்து தாக்கல் ஆகும். பின்னர் பதவி ஏற்கும் புதிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இடைக்கால பட்ஜெட்டை பொறுத்தவரையில் அதுஒரு தற்காலிக பட்ஜெட் ஆகும். 
 
இந்நிலையில் முழு பட்ஜெட்டை மத்திய பா.ஜனதா அரசு தாக்கல் செய்யலாம் என தகவல்கள் வெளியாகியது, இது எதிர்க்கட்சிகள் விமர்சனத்திற்கு வழிவகை செய்தது. இந்நிலையில் இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும் என நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி அமெரிக்காவில் உள்ளதால், பியூஸ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். 

Next Story