ஒரே மேடையில் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? மோடிக்கு ராகுல்காந்தி மீண்டும் சவால்


ஒரே மேடையில் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? மோடிக்கு  ராகுல்காந்தி மீண்டும் சவால்
x
தினத்தந்தி 7 Feb 2019 12:26 PM GMT (Updated: 7 Feb 2019 12:26 PM GMT)

ஒரே மேடையில், 5 நிமிடம் தொடர்ந்து என்னுடன் பிரதமர் மோடியால் விவாதம் செய்ய முடியுமா? என்று காங். தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்து உள்ளார்.

புதுடெல்லி

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:-

மோடி ஜி, உங்களுக்கு 56 இன்ச் மார்பு உள்ளதாக கூறினீர்கள். என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்று உங்களுக்கு சவால் விடுகிறேன்.

என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க மோடி தயாரா என்று பாஜகவிற்கு சவால் விடுகிறேன். அவர் பயப்படுகிறார். அவர் ஒரு கோழை மனிதர். 5 ஆண்டுகளாக அவரை எதிர்த்து வருகிறேன். அவரைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும். பிரிவினைவாதம் மூலம் நாட்டை ஆள முடியாது என்பதை இப்போது அவர் புரிந்து கொண்டிருப்பார்.

மோடி என்ற பிம்பம் முடிந்துவிட்டது. தோல்வி பயம் மோடியின் கண்களில் தெரிகிறது. பேச்சில் இருக்கின்ற அளவு மோடி தைரியமான மனிதர் கிடையாது என்பதை சீனா கண்டுபிடித்துவிட்டது என்று கூறினார்.

Next Story