டெல்லியில் ரூ.20 ஆயிரம் கோடி ஹவாலா மோசடி - வருமான வரித்துறை கண்டுபிடித்தது


டெல்லியில் ரூ.20 ஆயிரம் கோடி ஹவாலா மோசடி - வருமான வரித்துறை கண்டுபிடித்தது
x
தினத்தந்தி 11 Feb 2019 7:04 PM GMT (Updated: 11 Feb 2019 7:04 PM GMT)

டெல்லியில் ரூ.20 ஆயிரம் கோடி ஹவாலா மோசடியை வருமான வரித்துறை கண்டுபிடித்தது.

புதுடெல்லி, 

வருமான வரித்துறையின் டெல்லி புலனாய்வு பிரிவு அதிகாரிகள், பழைய டெல்லியின் வர்த்தக பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அதிரடி சோதனை நடத்தி வந்தனர். அதில், ஹவாலா தரகர்களை கொண்ட 3 குழுக்கள், ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு ஹவாலா மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

இந்த அளவுக்கு அவர்கள் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம், வரி ஏய்ப்புக்கும் உடந்தையாக இருந்துள்ளனர். ஆண்டு கணக்கில் நடந்த இந்த மோசடி தொடர்பான முக்கிய ஆவணங்களும் சோதனையில் கைப்பற்றப்பட்டன.

Next Story