சத்தீஷ்கரில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை


சத்தீஷ்கரில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 26 March 2019 3:13 AM GMT (Updated: 26 March 2019 3:13 AM GMT)

சத்தீஷ்கரில் 4 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற என்கவுண்டரின் போது சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

சுக்மா, 

சத்தீஷ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பிமாபுரம் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. 

இந்த துப்பாக்கிச்சண்டைக்கு பிறகு மாவோயிஸ்டுகளின் 4 உடல்களை பாதுகாப்பு படையினர் மீட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாவோயிஸ்டுகள் அப்பகுதியில் உள்ளனரா? என்று பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 


Next Story