அனுமதியின்றி பேரணி மேற்கொண்ட கவுதம் கம்பீர் மீது வழக்குப்பதிவு


அனுமதியின்றி பேரணி மேற்கொண்ட கவுதம் கம்பீர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 27 April 2019 10:11 AM GMT (Updated: 27 April 2019 10:11 AM GMT)

அனுமதியின்றி பேரணி மேற்கொண்ட கவுதம் கம்பீர் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், தன்னை பா.ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டார். இதனையடுத்து கிழக்கு டெல்லி நாடாளுமன்றத் தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். இப்போது அனுமதியின்றி பேரணி மேற்கொண்ட கவுதம் கம்பீர் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. ஏப்ரல் 25-ம் தேதி டெல்லி ஜக்பூரா பகுதியில் அனுமதியின்றி பேரணியை மேற்கொண்டார். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல் என தேர்தல் ஆணையம் கூறியது.

உள்ளூர் தேர்தல் அதிகாரியிடம், காவல்துறையிடம் புகாரளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனையடுத்து தேர்தல் அதிகாரி தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Next Story