முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி
முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
புதுடெல்லி,
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
நேருவின் நினைவு தினத்தையொட்டி, சாந்திவன் பகுதியில் உள்ள நேரு நினைவிடத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசு முன்னாள் துணைத்தலைவர் ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஜவஹர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி காலமானார்.
Related Tags :
Next Story