வடமாநிலங்களில் இடி, மின்னலுடன் புழுதி புயல் வீச வாய்ப்பு; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


வடமாநிலங்களில் இடி, மின்னலுடன் புழுதி புயல் வீச வாய்ப்பு; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 Jun 2019 3:58 AM GMT (Updated: 6 Jun 2019 3:58 AM GMT)

வடமாநிலங்களில் இடி, மின்னலுடன் புழுதி புயல் வீச வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோடை காலம் தொடங்கி தொடர்ந்து வரும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை உயர்ந்து வருகிறது.  சில இடங்களில் மழை பெய்தும் வெப்பம் தணியவில்லை.  மத்திய பிரதேசத்தின் நவ்காங் பகுதியில் நேற்று உயர்ந்தபட்ச வெப்பநிலை 47.9 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி உள்ளது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் வடமாநிலங்களில் கடுமையான அனல் காற்று வீசும் நிலை ஏற்பட்டு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேபோன்று அரியானா, சண்டிகார் மற்றும் டெல்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை மற்றும் புழுதி புயலுடன் மணிக்கு 30 முதல் 40 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் எச்சரித்து உள்ளது.

Next Story